ஹூங்கம பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் உயிரிழப்பு

ஹூங்கம பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் உயிரிழப்பு

ஹூங்கம பொலிஸ் நிலைய சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2021 | 9:42 pm

 

Colombo (News 1st) ஹூங்கம பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூடத்திற்குள் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் சட்டவிரோத மதுபாவனை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் இன்று மதியம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

சந்தேகநபர் ஹூங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் சுகயீனம் காரணமாக கீழே வீழ்ந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

இதன் பின்னர் சந்தேகநபர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்ததாக அவர் மேலும் கூறினார்.

ரன்ன பகுதியை சேர்ந்த 51 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்