மானிப்பாய் வீட்டில் தாக்குதல்: மூவர் கைது

மானிப்பாய் வீட்டில் தாக்குதல்: மூவர் கைது

by Staff Writer 18-12-2021 | 4:34 PM
Colombo (News 1st) மானிப்பாயில் கடந்த புதன்கிழமை (15) வீடொன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவில்லை சேர்ந்த மூன்று சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த சந்தேகநபர்கள் பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிளுக்கும் தீவைத்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 2 வாள்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபர்களை இன்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.