by Staff Writer 17-12-2021 | 3:42 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அச்சுவேலி, புத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் நேற்று (16) மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
புத்தூர் பகுதியை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பெண்ணின் சடலம் மீதான பிரேத பிரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.