by Staff Writer 17-12-2021 | 6:30 PM
Colombo (News 1st) கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) இரவு 11 மணி முதல் 09 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை இரவு 11 மணிமுதல் நாளை மறுதினம் காலை 8 மணி வரை கொழும்பு 9, 10, 11, 12, 13 மற்றும் 14 பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் வழங்கல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.