வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

by Staff Writer 16-12-2021 | 9:05 AM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மாங்குளம் வவுனிக்குளத்தில் மூழ்கி 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற வள்ளமொன்று குடைசாய்ந்து, நேற்று (15) இந்த அனர்த்தம் சம்பவித்ததாக பொலிஸார் கூறினர். தந்தையும் மகனும் மீன்பிடிக்கச் சென்ற போது வள்ளம் குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தந்தை நீந்தி கரையை வந்தடைந்த நிலையில், பிரதேச மக்கள் இணைந்து நீரில் மூழ்கிய இளைஞரும் மீட்கப்பட்டுள்ளார். இளைஞர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். மாங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.