ஒமிக்ரோன் பிறழ்வுடன் மேலும் மூவர் அடையாளம்

நாட்டில் ஒமிக்ரோன் பிறழ்வுடன் மேலும் மூவர் அடையாளம்

by Staff Writer 16-12-2021 | 5:07 PM
Colombo (News 1st) நாட்டில் ஒமிக்ரோன் பிறழ்வுடன் மேலும் மூவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தமது ட்விட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். தமது ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மேலும் மூன்று புதிய தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வுடன் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.