தமிழ்நாட்டில் முதலாவது Omicron தொற்றாளர் பதிவு

தமிழ்நாட்டில் முதலாவது Omicron தொற்றாளர் பதிவு

by Staff Writer 16-12-2021 | 9:16 AM
Colombo (News 1st) இந்தியாவின் தமிழ்நாட்டில் நபர் ஒருவருக்கு Omicron பிறழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஒருவருக்கு Omicron பிறழ்வு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, பிலிப்பைன்ஸ் நாட்டிலும் முதல்தடவையாக 2 பேருக்கு Omicron உறுதி செய்யப்பட்டுள்ளது.