எழிலன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அடுத்த வருடம்

எழிலனை முன்னிலைப்படுத்துமாறு தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு அடுத்த வருடம்

by Staff Writer 16-12-2021 | 6:51 PM
Colombo (News 1st) இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த எழிலன் உள்ளிட்டவர்களை முன்னிலைப்படுத்துமாறு தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான வழக்கின் தீர்ப்பு அடுத்த வருடத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது. வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட சரணடைந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 12 பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுவின் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று அறிவிக்கப்படவிருந்தது.