English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
16 Dec, 2021 | 6:31 pm
Colombo (News 1st) இந்திய ட்ரோலர் படகு மோதி பாதிப்பிற்குள்ளான இலங்கை படகொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றிரவு இந்த படகு மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
படகிலிருந்த இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களின் வலைகள் இந்திய மீனவர்களின் படகினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் கோவளம் மற்றும் கச்சத்தீவு கடற்பரப்புகளில் இந்திய மீனவர்களின் சுமார் 200 படகுகளை நேற்றிரவு கண்காணித்ததாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவப் படகுகள் காணப்படுவதை, வட பகுதி மீனவர்கள் தமது கையடக்கத்தொலைபேசியில் பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து, வடக்கு கடற்பகுதியில் நேற்றிரவு சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க கடற்படையின் இரண்டு விசேட படகுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதன்போது, நெடுந்தீவு பகுதியில் பாதிப்புக்குள்ளாகிய நிலையில் காணப்பட்ட இலங்கை படகு மீட்கப்பட்டுள்ளது.
படகின் வௌிபுற இணைப்பு இயந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், படகின் ஒரு பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது.
20 Jul, 2022 | 09:42 PM
17 Jul, 2022 | 05:36 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS