யாழ். நயினாதீவில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். நயினாதீவில் ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 15-12-2021 | 2:13 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நயினாதீவு - 3 ஆம் வட்டாரப்பகுதியில் இன்று (15) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நயினாதீவு - 2 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவர், இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 9 நாட்களாக காணாமல் போயிருந்ததாகவும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.