பகிரங்க விவாதத்திற்கு தயார்: சாணக்கியன் அறிக்கை

நசீர் அஹமட் உடனான பகிரங்க விவாதத்திற்கு தயார்: சாணக்கியன் அறிக்கை

by Staff Writer 15-12-2021 | 8:59 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் உடனான பகிரங்க விவாதத்திற்கு தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் நேற்று (14) விடுத்த பகிரங்க அழைப்பிற்கு பதில் வழங்கி அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை கூறியுள்ளார். எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், குறித்த ஊடகம் ஏற்பாடு செய்யும் பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதற்கு தான் தயாராகவே இருப்பதாகவும் இரா.சாணக்கியன் தனது பதில் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.