சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது: கமல் குணரத்ன

by Staff Writer 15-12-2021 | 6:34 PM
Colombo (News 1st) சஹ்ரான் உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு புலனாய்வுத் துறையினால் சம்பளம் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முழுமையான பொய் என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். தாம் பாதுகாப்பு செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டதாக அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாதுகாப்பு செயலாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். சிலர் அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்காக பல பொய் பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.