கடும் வறட்சியால் உயிரிழக்கும் வனவிலங்குகள்

கென்யாவில் கடும் வறட்சியால் உயிரிழக்கும் வனவிலங்குகள்

by Bella Dalima 15-12-2021 | 4:59 PM
Colombo (News 1st) கென்யாவில் கடும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. இவ்வாண்டு மழைப்பொழிவு குறைந்ததால் அங்கு கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக வடக்கு கென்யாவின் வஜிப் , அல் ஜசீரா போன்ற பகுதிகளில் செப்டம்பர் மாத மழை 30 சதவீதத்திற்கும் குறைவாக பெய்திருப்பதால், அப்பகுதி சார்ந்த வனங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் , பல வன உயிரினங்கள் நீர் , உணவு கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் இணையத்தில் கென்யாவின் வஜீர் வனப்பகுதியில் வறட்சியால் உணவில்லாமல் இறந்து கிடந்த 6 ஒட்டகச்சிவிங்கிகளின் புகைப்படங்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.