மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகனும் பலி 

by Staff Writer 15-12-2021 | 9:29 AM
Colombo (News 1st) சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் மாதம்பை - இரட்டைக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். இன்று (15) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 23 வயது மகன் மற்றும் 53 வயதான தாயுமே உயிரிழந்துள்ளனர். அனுராதபுரத்தில் நோயாளர் ஒருவரை பார்வையிடச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் கட்டான பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.