நேருக்கு நேர் மோதிய பிரிட்டன்-டென்மார்க் கப்பல்கள்

பிரித்தானியா - டென்மார்க் கப்பல்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி

by Staff Writer 14-12-2021 | 11:56 AM
Colombo (News 1st) பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க்குக்கு சொந்தமான படகுடன் மோதிய சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க்குக்கு சொந்தமான படகுடன் சுவிடன் கடற்பரப்பில் மோதியதில் ஒருவர் உயிரழந்துள்ளார். கப்பலுடன் மோதிய டென்மார்க்கிற்குச் சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், கடல் மற்றும் வான் மார்க்கமாக தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.