பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நசீர் அஹமட் அழைப்பு

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சாணக்கியனுக்கு நசீர் அஹமட் அழைப்பு

by Bella Dalima 14-12-2021 | 7:39 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அழைப்பு விடுத்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10 ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வௌியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து காணி பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகின்றனர் என இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கூறியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில், மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.