இன்று (14) முதல் மின்வெட்டு இல்லை - மின்சார சபை

இன்று (14) முதல் மின்வெட்டு இல்லை - மின்சார சபை

by Staff Writer 14-12-2021 | 1:13 PM
Colombo (News 1st) புனரமைப்பு பணிகளின் பின்னர் நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி இன்று (14) தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனூடாக இன்று (14) முதல் மின்வெட்டை அமுல்படுத்த தேவையில்லை என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க குறிப்பிட்டார்.