பிரியந்த கொலை: மேலும் 18 பேருக்கு விளக்கமறியல்

பிரியந்த குமார கொலை: மேலும் 18 பேருக்கு விளக்கமறியல் 

by Staff Writer 13-12-2021 | 4:57 PM
Colombo (News 1st) பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலும் 18 பேரை விளக்கமறியலில் வைப்பதற்கு பாகிஸ்தான் பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றம் இன்று (13) உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரியந்தவின் கொலை தொடர்பில் இதுவரை 52 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.