பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து வர்த்தமானி

பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி

by Staff Writer 13-12-2021 | 1:35 PM
Colombo (News 1st) பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, ​நேற்று (12) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.