தென் ஆபிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

தென் ஆபிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 13-12-2021 | 4:52 PM
Colombo (News 1st) தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், இலேசான அறிகுறிகள் மாத்திரமே காணப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தென் ஆபிரிக்க இராணுவ சுகாதார நிலைய வைத்தியர்கள் சிகிச்சையளித்துவரும் நிலையில், Cape Town இலுள்ள இல்லத்தில் ஜனாதிபதி ரமபோசா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.