யாழில் கடலாமையுடன் ஒருவர் கைது

by Staff Writer 12-12-2021 | 5:58 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோகிராம் எடையுடைய கடலாமையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். சந்தேகநபரால் பிடிக்கப்பட்ட கடலாமையை குறிகட்டுவான் கடலில் விடுமாறு யாழ். நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.