மூதூரில் மிதிவெடி வெடித்ததில் சிறுவன் பலி

by Staff Writer 12-12-2021 | 6:33 PM
Colombo (News 1st) திருகோணமலை - மூதூர் - இக்பால் நகர் பகுதியில் மிதிவெடி வெடித்ததில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (12) மாலை 3.50 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்பால் நகர் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவனே இதன்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சிறுவனின் சடலம் தோப்பூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.