சந்தேகநபர்களை கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள்

பொரளை கொள்ளை: சந்தேகநபர்களை கைது செய்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள்

by Staff Writer 12-12-2021 | 3:02 PM
Colombo (News 1st) பொரளை - மருதானை வீதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளுக்காக 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (11) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி இந்த கொள்ளையை நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்காபரணங்கள் உள்ளிட்ட 05 பெட்டிகளுடன் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட தங்காபரணங்களின் பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை.