by Staff Writer 11-12-2021 | 9:34 PM
Colombo (News 1st) நியூஸ்ஃபெஸ்ட் - NDB ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ஶ்ரீலங்கா வனிதாபிமான 2021-க்கான போட்டிகள் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இன்று (11) நடைபெற்றன.
''நாட்டை கட்டியெழுப்பும் மகளிரை வலுப்படுத்துவோம் - இலங்கை வனிதாபிமான'' என்பது நாட்டில் உள்ள தைரியமான பெண்களை ஊக்குவிப்பதற்காகவும் பாராட்டுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியின் வட மாகாணத்திற்கான போட்டி இன்று காலை யாழ்ப்பாணம் - வீரசிங்கம் மண்டபத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
இதன்போது, பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டு விற்பனைக் கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன
வட மாகாண வெற்றியாளர்கள் இன்று பிற்பகல் கௌரவிக்கப்பட்டனர்.
தொழில்முயற்சி, இளம் தலைவிகள், தன்னார்வ சேவை, கல்வி, விளையாட்டு மற்றும் சுற்றாடல் முகாமைத்துவம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது
இதேவேளை, தொழிற்பயிற்சி அதிகார சபையின் அனுசரணையுடன் பெண்களுக்கான செயலமர்வுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் நடைபெற்றன.