விளக்கமறியல் சிறையில் மோதல்: கைதிகளுக்கு காயம்

பதுளை விளக்கமறியல் சிறையில் மோதல்: கைதிகள் ஐவர் காயம்

by Staff Writer 11-12-2021 | 2:42 PM
Colombo (News 1st) பதுளை விளக்கமறியல் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 05 கைதிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த கைதிகள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். பதுளை சிறைச்சாலையில் நேற்று (10) பகல் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்பில் பதுளை சிறைச்சாலையின் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.