நடுக்கடலில் சுற்றிவளைப்பு: 250 கிலோ ஹெரோயினுடன் ஈரான் படகு பிடிபட்டது

by Staff Writer 11-12-2021 | 3:03 PM
Colombo (News 1st) இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் சுமார் 250 கிலோகிராம் ஹெரோயினுடன் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு ஈரான் நாட்டிற்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருளை ஏற்றிவந்த படகு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். கைப்பற்றப்பட்ட படகில் 06 பேர் பயணித்துள்ளனர். படகிலிருந்து 225 ஹெரோயின் பொதிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தெற்கு கடலில் 900 கடல் மைல் தொலைவில் குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. படகை இரண்டு நாட்களுக்குள் கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.