திவுலபிட்டிய கோழிப்பண்ணையில் தீ பரவல்

by Staff Writer 11-12-2021 | 2:21 PM
Colombo (News 1st) கம்பஹா - திவுலபிட்டிய பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் தீ பரவியது. இன்று (11) காலை 10 மணியளவில் பண்ணையில் தீ பரவியதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டது. தீயை கட்டுப்படுத்துவதற்கு 05 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கம்பஹா தீயணைப்பு பிரிவு தெரிவித்தது. தீ பரவியமை காரணமாக சுமார் 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். கோழிப்பண்ணையாளர்களும் அயலவர்களும் இணைந்து கோழிகளை மீட்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். மின்சார ஒழுக்கே தீ பரவியமைக்கான காரணம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.