Colombo (News 1st) ஆபிரிக்க நாடான புருண்டியிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 38 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
கிடேகா (Gitega) பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலை ஒன்றிலேயே இந்த தீ விபத்து நேற்று முன்தினம் (07) சம்பவித்துள்ளது.
தீ விபத்தில் குறைந்தது 69 கைதிகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக நாட்டின் உப ஜனாதிபதி தெரிவித்தார்.