Colombo (News 1st) இலங்கையில் தன்னார்வ சேவையை மேம்படுத்துவதற்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில்
நியூஸ்பெஸ்ட் (News 1st) மற்றும்
மக்கள் சக்திக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஐக்கிய நாடுகளின் தன்னார்வ சேவை விருது வழங்கும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
கொழும்பு - காலி முகத்திடல் ஹோட்டலில் விருது வழங்கும் விழா நேற்று (07) நடைபெற்றது.
இதன்போதே, தன்னார்வ சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
மக்கள் சக்தி வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படுகின்றது.
2016 ஆம் ஆண்டில் சர்வதேச மனிதாபிமான சம்மேளனத்தின் போது, மக்கள் சக்திக்கு விருதொன்று கிட்டியமையும் குறிப்பிடத்தக்கது.