நில்லம்பை நீர்த்தேக்கத்தில் காணாமற்போயிருந்த பெண்ணின் சடலம் மீட்பு

by Staff Writer 08-12-2021 | 6:15 PM
Colombo (News 1st) பேராதனை - நில்லம்பை நீர்த்தேக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) குளிக்கச் சென்ற நிலையில் காணாமற்போயிருந்த 20 வயதான தாயின் சடலம் இன்று பேராதனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது காணாமற்போன 2 வயதான குழந்தையை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேராதனை பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சம்பவத்தில் காணாமற்போன 22 வயதான ஒருவரின் சடலம் கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டது. கண்டி - பூர்ணவத்தை, மஹியாவை பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நில்லம்பை நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.