by Staff Writer 08-12-2021 | 11:36 AM
Colombo (News 1st) சூரியவெவ - மீகஹஜந்துர பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 49 வயதான இருவர் இன்று (08) அதிகாலை காட்டு யானை தாக்குலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, யானை - மனித மோதல் அதிகளவில் காணப்படும் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளுக்கான இரண்டாம் தடுப்பை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.