கொக்கட்டிச்சோலை ஆலய மடத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 07-12-2021 | 11:16 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை - கச்சேனை பகுதியிலுள்ள ஆலயமொன்றின் மடத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் கழுத்து பாகத்தில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் ஏற்பட்ட முறுகல் நிலையினால், கோயிலில் உறங்கச் செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற நபரே ஆலய மடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பலந்துறையை சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று (07) பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.