by Bella Dalima 07-12-2021 | 8:09 PM
Colombo (News 1st) அரச மற்றும் அரச தனியார் கலப்பு ஊழியர் சங்கம் நாளை (08) சுகயீன விடுமுறையை பதிவு செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.
10,000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரி கூட்டு தொழிற்சங்க நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படவுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தௌிவுபடுத்துவதற்காக தேசிய தொழிற்சங்க ஒன்றிய நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பல்துறைசார் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.