by Staff Writer 07-12-2021 | 8:47 AM
Colombo (News 1st) வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே காலமானார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே காலமாகியுள்ளார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவராகவும் ராஜா கொல்லுரே செயற்பட்டிருந்தார்.