English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Dec, 2021 | 8:39 pm
பொலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் நோக்கி புறப்பட்ட சந்தர்ப்பத்தில், விமான நிலைய அதிகாரிகள் அவரை நிறுத்தியுள்ளனர்.
இந்திய பாதுகாப்பு அதிகாரிகளால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய அவர் நிறுத்தப்பட்டார்.
நாளை (08) டெல்லி விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவரின் பெயரும் தொடர்புபட்டமையே இந்த சம்பவத்திற்கான அடிப்படை காரணமாகும்.
இந்தியாவில் பாரிய ஊழல் கொடுக்கல் வாங்கலாகக் கருதப்படும் சம்பவம் தொடர்பில் சுகேஷ் சந்திரசேகர் , அவரின் மனைவியான நடிகை லீனா மர்யா போல் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள சுகேஷ் சந்திரசேகரினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாக்குலின் பெர்னாண்டஸூக்கு பாரசீக பூனை, குதிரை உள்ளிட்ட பெறுமதி வாயந்த பல பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
சந்திரசேகரன் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸூக்கு இடையிலான நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்திய அதிகாரிகள் பல விடயங்களை வௌிக்கொணர்ந்துள்ளனர்.
இதற்கமைய, அவரின் வௌிநாட்டுப் பயணத்தை நிறுத்துவதற்கு நேற்று முன்தினம் இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
30 Apr, 2022 | 05:27 PM
25 Jun, 2022 | 06:17 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS