by Staff Writer 07-12-2021 | 12:55 PM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைகளின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் H.L.V.M. லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரின் பரிந்துரைகளுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (07) முதல் அமுலாகும் வகையில் மேஜர் ஜெனரல் H.L.V.M. லியனகேவின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, புதிய பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவத்தின் தொண்டர் படையணியின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியுள்ளார்.