'வாழைத்தோட்டம் பவாஸ்' கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

by Staff Writer 05-12-2021 | 3:07 PM
Colombo (News 1st) வாழைத்தோட்டம் - பழைய ஜோன் வீதி பகுதியில் 'வாழைத்தோட்டம் பவாஸ்' என்பவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (04) காரொன்றில் வந்தவர்கள் பவாஸைத் துரத்திச்சென்று, கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார். 'வாழைத்தோட்டம் பவாஸ்' என்பவர் குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிலகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்