ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 05-12-2021 | 7:02 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் இன்று (05)  உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.