by Staff Writer 05-12-2021 | 4:53 PM
Colombo (News 1st) சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் 07 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
22 நாட்களின் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை 50 நாட்களுக்கு நிறுத்துவதற்கு கடந்த மாதம் 15 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.