படகுப்பாதை கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லை

களுத்துறையில் படகுப்பாதை கவிழ்ந்ததில் ஒருவரை காணவில்லை

by Staff Writer 04-12-2021 | 1:52 PM
Colombo (News 1st) களுத்துறை - பொலஸ்ஸகம பகுதியில் களுகங்கையின் இறங்குதுறைக்கு அருகிலுள்ள பாலத்திற்கு அருகில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளார். நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தின் போது, குறித்த படகுப்பாதையில் 05 பேர் பயணித்துள்ளதுடன், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சைக்கிளொன்றும் கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் கூறினர். அவையும் ஆற்றில் மூழ்கியுள்ளன. காணாமற்போன நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை. அவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் மூழ்கிய போது காப்பற்றப்பட்டவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.