நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிப்பு

நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிப்பு

by Staff Writer 03-12-2021 | 1:59 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை வழமைக்கு திருப்புவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் M.R. ரணதுங்க தெரிவித்தார். மின்சார விநியோகத்தை வழமைக்கு திருப்பும் வரை வீடுகளில் காணப்படும் சூரிய மின்கலங்களை பயன்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்கு திருப்ப 3 மணித்தியாலங்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.