மின்சார வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

by Staff Writer 02-12-2021 | 7:20 AM
Colombo (News 1st) புத்தளம் - கல்லடி பகுதியில் மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. மின்சார வேலியில் சிக்கிய குறித்த யானை 03 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர். புத்தளம் - கல்லடி, சிங்ஹபுர பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த யானை உயிரிழந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.