ஹாதியாவிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

by Staff Writer 02-12-2021 | 3:53 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் இன்று (02) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.ட்ரொக்ஸி முன்னிலையில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சாரா ஜஸ்மின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் அறிந்திருந்தும் , அந்த தகவலை பொலிஸாருக்கு தெரிவிக்காமை குறித்து சஹ்ரானின் மனைவிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 05 ஆம் பிரிவின் கீழ் பிரதிவாதியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா குற்றமிழைத்துள்ளதாக குற்றப்பத்திரத்தினூடாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். பிரதிவாதி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடுநர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். விடயங்களை பரிசீலித்த நீதிபதி ஜே.ட்ரொக்ஸி, எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி பிரதிவாதியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவை மன்றில் ஆஜராக்குமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏனைய செய்திகள்