பொல்லால் தாக்கி ஒருவர் கொலை; உறவினர்கள் மூவர் கைது

கிளிநொச்சியில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை; உறவினர்கள் மூவர் கைது

by Staff Writer 02-12-2021 | 2:58 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - தர்மபுரம், சம்புக்குளம் பகுதியில் ஒருவர் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கல்மடு நகர் கிராமத்தை சேர்ந்த 36 வயதான ஒருவரே தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் அண்ணனும் தம்பியும் சித்தப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்