சட்டவிரோத பணப் பரிமாற்றம் - வங்கி கணக்கு முடக்கம்

நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் பணம் அனுப்புவோரின் வங்கி கணக்குகளை இடைநிறுத்த நடவடிக்கை - மத்திய வங்கி

by Staff Writer 02-12-2021 | 12:15 PM
Colombo (News 1st) சட்டவிரோதமான முறைமைகள் ஊடாக நாட்டுக்கு பணத்தை அனுப்பும் மற்றும் விநியோகிப்போரின் வங்கிக் கணக்குகளை உடனடியாக இடைநிறுத்துவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வௌிநாடுகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் தமது வருமானத்தை அனுப்பிவைப்பதற்கு சட்டபூர்வமான நடைமுறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை, இம் மாதத்திற்குள் வௌிநாட்டிலிருந்து அனுப்பப்படுகின்ற ஒவ்வொரு டொலருக்கும் மேலதிகமாக 10 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.