பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா?

by Staff Writer 30-11-2021 | 2:10 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தில் நாட்டை மூடுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டில் அனேகமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது கூறியுள்ளார். எவ்வாறாயினும், பண்டிகைக் காலத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு அமைச்சர், மக்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளார்.