மரத்துடன் மோதிய முச்சக்கர வண்டி: யுவதி பலி

by Staff Writer 29-11-2021 | 4:02 PM
Colombo (News 1st) புத்தளம் - முந்தல் அங்குனவில் பகுதியில் நேற்றிரவு (28) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்குனவில் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாகனத்தில் பயணம் செய்ததாகவும் அதில் 24 வயதான யுவதியொருவரே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்