ஐந்தாவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

ஐந்தாவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2021 | 2:07 pm

Colombo (News 1st) நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (28) முதல் இன்று (29) அதிகாலை வரை குறித்த சுற்றுலா விடுதியில் விருந்துபசார நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கம்பளையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் சுற்றுலா விடுதியின் முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.

ஐந்தாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியே குறித்த நபர் தவறி வீழ்ந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்