மகாவலி கங்கைக்குள் கார் கவிழ்ந்ததில் காணாமல்போன நபர் சடலமாக மீட்பு

by Staff Writer 28-11-2021 | 4:16 PM
Colombo (News 1st) கண்டி - இலுக்மோதர பகுதியில் மகாவலி கங்கைக்குள் காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமற்போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (27) இரவு இலுக்மோதர பகுதியில் காரொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மகாவலி கங்கைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதன்போது காரிலிருந்த மூவரில் மீட்கப்பட்ட இருவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.