by Staff Writer 28-11-2021 | 3:47 PM
Colombo (News 1st) கண்டி - இலுக்மோதர பகுதியில் மூவருடன் பயணித்த காரொன்று மகாவலி கங்கைக்குள் வீழ்ந்துள்ளதில் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
நேற்று (27) இரவு கண்டி - பேராதனை வீதியில் பயணித்த குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்த மூவரில் இருவர் மீட்கப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர் மற்றும் காரை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.